malik and kabirஅமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் அவர்களை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு வருமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சாட்சிமளிப்பதற்காக இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானதாக கூறப்படுகிறது.