british conservative partyஇலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குதல், மறுசீரமைப்பு பொறிமுறை உள்ளிட்ட பல உறுதிமொழிகள் அரசாங்கத்தினால் சர்வதேசத்திடம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை உரிய வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்ஃபன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்கள் முகம்கொடுத்த அசாதாரண சூழ்நிலைகளுக்கும் நீதிக்கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மென்செஸ்ட்டரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்கள் இந்த விடயத்தைக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.