swiss deadசுவிட்சர்லாந்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன், சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் வீட்டிற்கு இன்று விஜயம் செய்திருந்தார்.

இதன்போது அவர் உயிரிழந்தவர் தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த சனிக்கிழமை (07) பொலிசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் புகலிடக் கோரிக்கையாளரான 38 வயதான சுப்பிரமணியம் கரன் என்ற இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.