missing and un metஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான பவுலோ கிரீப் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ளார். கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலளித்த பவுலோ கிரீப் இந்த போராட்டத்தை மதிக்கின்றேன் நீங்கள் கூறியவற்றை கருத்தில் கொண்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.