hartalஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்றையதினம் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 அரசியல் கைதிகள், தங்களின் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி, இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை முன்னிறுத்தி கொழும்பிலும் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.