asdsசுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்துக்கு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ பகுதியில் சுட்டுகொல்லபட்ட கரனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்குகொள்வார்கள் என தெரியவருகின்றது. இது தொடர்பில் சுவிஸ் பயணமான குறித்த குடும்ப அங்கத்தவர்கள் இன்று ( நேற்று ) பயணமாகும் தாம் நாளை சுவிஸ் போனதும் அங்கே உடனடியாகவே இறுதிக்கிரியைகள் நடைபெற இருப்பதாகவும் தமக்கு சொற்ப நேரமே கிடைக்கும் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு தமக்கு சுவிஸ் மண்ணில் யாரும் உறவினர்கள் நண்பர்கள் எவரும் இல்லை எனவும் தமக்காக அனைத்து சுவிஸ் வாழ் இலங்கை உறவுகளும் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தமக்கான உதவிகளையும் வழங்கவேண்டும் எனவும் இந்த கொலைக்கான நீதியும் தமக்கு கிடைக்க உதவி புரியவேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.