railwayசம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சேவையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, தங்களது கோரிக்கைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன் அவர் கலந்துரையாடி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து பணிப்புறக்கணிப்பினை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.