anuradhapuram jailமூன்று தமிழ் அரசியல் கைதிகள் இன்று 27 ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், கைதிகள் நலமாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவர்களின் உடல்நிலை குறித்து வைத்தியர்கள் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக துஷார உபுல்தெனிய மேலும் கூறியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், கடந்த மாதம் 25ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தமது வழக்கை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.