indian boatநடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, கடல் சீற்றம் காரணமாக குறித்த படகு கடலில் மூழ்கியுள்ளது.

படகு மூழ்கியதால் செய்வதறியாது திகைத்து நின்ற மீனவர்கள் ஏழு பேரும் உயிருக்குப் போராடியபடி இருந்தனர். சர்வதேச கடல் எல்லையில், கொழும்புக்குத் தென்கிழக்குப் பகுதியில், 28 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மீனவர்கள் சிலர் உயிருக்குப் போராடுவதைக் கண்ட இலங்கை மீனவர்கள், உடன் அப்பகுதிக்கு விரைந்து, ஏழு மீனவர்களையும் பத்திரமாக மீட்டதோடு, மீட்கப்பட்ட மீனவர்களை காலி கடற்படை முகாமில் ஒப்படைத்துள்ளனர்.