image_8bd2529e2cஅம்பாறை வீரகொடபல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உஹனவில் இருந்து அம்பாறை திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றில் வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 12 பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலும் 3 பேர் காயமடைந்து மத்திய முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவலைக்கிடமான 9 பேர் அம்பாறை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.