LTTEஇறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் தொலைத்தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்ட முக்கிய நிலைய ஆவணம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாப கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் ஏற்கனவே சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெற்றுள்ள நிலையில் அந்த இடத்தில் குறித்த நிலையக் குறியீட்டு ஆவணம் காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நிலையக் குறியீட்டு ஆவணத்தில் தலைமைச் செயலகம், கட்டளைத்தளபதி ரமேஸ், லெப்டினன் கேணல் இம்ரான் பாண்டியன், வவுனியா கட்டளைப் பணியகம், ராதா வான்காப்பு படையணி, அரும்பு, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, லெப்டினன் கேணல் குட்டிசிறி மோட்டர் படையணி,

வன்னி மாவட்ட பணியகம், கிட்டு பிராங்கிப் படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, மில்லர் பணிமனை, புலனாய்வுத்துறை, நிதித்துறை, காவல்துறை, உள்ளிட்ட முக்கிய பணியகங்களின் தொலைத் தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.