drown in waterவவுனியா ஈச்சங்குளம் மரவன்குளம் பகுதியில் அமைந்துள்ள வாவி ஒன்றில் நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றதாக ஈச்சம்குளம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீராடிக் கொண்டிருந்த வேளையில் வலிப்பு நோய் ஏற்பட்டமையினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த நபர் தனியே நீராடிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.  மரவன்குளம் பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய நடராசா சந்திரகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஈச்சம்குளம் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.