உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி 27ம் திகதி நடாத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.