image_42a57e409fகாலை உணவை உட்கொள்ளாது, பாடசாலைக்குச் சென்ற மாணவி, வாந்தியெடுத்ததையடுத்து, அவர் கர்ப்பமடைந்துள்ளார் எனக்கூறி, பாடசாலையிலிருந்து நீக்கிய சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயம் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அநுராதபுரம் காரியாலயத்தின் அதிகாரிகள், அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை, அந்தப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளை, கொழும்புக்கு அடுத்தவாரம் ஆணைக்குழு அழைத்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில், ஊடகங்களில் வெளியாக செய்திகளை அடிப்படையாக வைத்து, முறைப்பாடுகள் இன்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.