image_42a57e409fகாலை உணவை உட்கொள்ளாது, பாடசாலைக்குச் சென்ற மாணவி, வாந்தியெடுத்ததையடுத்து, அவர் கர்ப்பமடைந்துள்ளார் எனக்கூறி, பாடசாலையிலிருந்து நீக்கிய சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயம் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அநுராதபுரம் காரியாலயத்தின் அதிகாரிகள், அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Read more