landslide-warningகண்டி ஹேவாஹெட்ட, ருக்கூட் தோட்டத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று கடும் மழை பெய்ததை அடுத்து, முன் எச்சரிக்கையுடன் இவர்கள் சனசமூக நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 51 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மண் சரிவு அபாயம் காரணமாக இந்த மக்கள் கடந்த வருடமும் இடம்பெயர்ந்திருந்தனர்.