faiser mustafaஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல், நவம்பர் மாதம் 1ஆம் திகதியன்று வெ ளியிடப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தற்போது நடத்தி கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் திருத்தம் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் கூட்டம் நாளை ஏறாவூரில் இடம்பெறவுள்ளது. ஏறாவூர் அல் முனீரா வித்தியாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தேர்தல் முறைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார், அத்துடன் எதிர்வரும் தேர்தல்களின் போது பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் முறைமை மற்றும் வட்டார ரீதியான வாக்களிப்பு முறைமை குறித்து இதன் போது விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.