Header image alt text

housing scheme (2)50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய் மானியமாக வழங்கவுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.அத்துகோரல ஆகியோருக்கு இடையில் இந்த புரிந்துணர்வுகள் நேற்று கைச்சாத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

jailதமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணகரத்தினம் ஜீவரத்தினம் திருகோணமலையில் கைது செய்யப்பட்டு, 11 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், சட்ட மா அதிபரினால் 2014 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. Read more

electronic Identity cardஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதன் முதற்கட்டமாக, இன்று முதல் தற்காலிக அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஆட்பதிவு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் வரையில், இதனைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டுள்ளவர்கள், புதிய தற்காலிக அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

NICஒரே இலக்கத்தில் இரு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குருதெனிய சிங்ஹாரகம 10 ஏக்கர் பகுதியை சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த ஏக்கநாயக்க முதியன்சலாகே புஞ்சிரத்ன என்ற நபர் அரச வங்கியொன்றில் சேமிப்பு கண்கொன்றை ஆரம்பிக்க சென்றுள்ளார். இதன்போது தனது தேசிய அடையாள அட்டையை வங்கி உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய அவருக்கு சிறிது நேரத்தில் அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. Read more