missing andankulamமன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக, அவரது மனைவி நேற்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை நடத்தி வரும் சன் நீக்கிலாஸ் (குணபால்) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 076-8400798, மற்றும் 076-7480357 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.