trainரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளது.

குறிப்பாக, இந்தக் கட்டண உயர்வு ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும், கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லையென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.