protest-7ஆசிரியர் நியமனங்களுக்காக அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதேவேளை, தாம் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கல்முனையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.