norwayயுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நோர்வே வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் தோர்ப்ஜன் கோஸ்டாட்செதர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். மக்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதை உறுதி செய்வது கட்டாயமாகும். அத்துடன் அவர்களின் வாழ்க்கை தங்களின் சொந்த இடங்களிலேயே மீள நிலைநிறுத்தப்பட வேண்டும். இதன் காரணமாகவே காணிகள் விடுவிக்கப்பட ஆரம்பத்ததில் இருந்து நோர்வே அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.