Header image alt text

north koreaவடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என, ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்ததிலேயே, இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது.

ஜப்பானின் 6ஆவது அணுகுண்டுச் சோதனை, செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையே, வடகொரிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அணுச்சோதனையாகக் கருதப்பட்டது. ஆனால், இச்சோதனையின் போது, அது மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்தது என, முன்னரே செய்தி வெளியாகியிருந்தது. Read more

menus islandஅவுஸ்திரேலியாவின் மானஸ்தீவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை பொறுப்பேற்குமாறு, நியூசிலாந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானஸ்தீவு ஏதிலிகள் முகாம் மூடப்பட்டுள்ள போதும், அங்கிருந்து 600 ஏதிலிகள் வரையில் வெளியேற மறுத்து வருகின்றனர். எனினும் குறித்த முகாமில் இருந்து அவுஸ்திரேலியாவின் பணியாளர்கள் அனைவரும் வெளியேறி இருப்பதுடன், மின்சார இணைப்பு மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. Read more

europen unionவடக்கில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கான உதவிகளையும், அது தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முயற்சிக்கான வேலைவாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்க ஐரோப்பிய நாடுகள் முன்வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமை வகிக்கும் தலைமைத்துவ பாராளுமன்ற உறுப்பினர் ஐPன் லெம்பட் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஐpனோல்ட் குரே தெரிவித்தார். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐpன் லெம்பட் தலைமையிலான 06 அடங்கிய பாராளுமன்ற குழுவினர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்தனர். Read more

Sirisenajpgஇலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான்உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளது.

ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தூதுக்குழுவின் தலைவர் சர்வதேச கூட்டுறவு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் உதவி அமைச்சர் Kazuya Nashida ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். Read more

election meetஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2018ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியொன்றில் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் 11ஆம் திகதிக்கும் 20 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் கோரப்படும் எனவும் அவ்வாணைக்குழு கூறியுள்ளது. எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படுமெனவும் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

rajithஎதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன பொது இலச்சினையின் கீழ் போட்டியிட தயார் என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பேருவளை தொகுதியில் அவ்வாறு போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

deadயாழ். கோப்பாய் கைதடி வீதிப் பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தானை, சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்ப பாடசாலையின் ஆசிரியரான இவர், நேற்று இரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். Read more

jafffna campusயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று முதல் நிறுத்தியிருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிர்வாக முடக்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 37 வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வருகின்றனர். Read more