election meetஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2018ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியொன்றில் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் 11ஆம் திகதிக்கும் 20 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் கோரப்படும் எனவும் அவ்வாணைக்குழு கூறியுள்ளது. எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படுமெனவும் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.