முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா தேசிய மக்கள் கட்சி என்ற பெயரில் இன்று புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். கொழும்பு நாரஹேன்பிடவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கட்சி காரியாலயமும் திறக்கப்பட்டது.
இதன்போது, கருத்து தெரிவித்த மெர்வின் சில்வா, நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் தம்முடன் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக கூறினார்.