arrestedமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த 18ம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலையின் சந்தேகநபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழி காட்டலில் விஷேட விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அப்துல் வஹாப் தலைமையில், பொலிஸ் உத்தியோகத்தர்களான ரோஹன, மனோகரன், தாஹா, பன்டார, சுரங்க, சாரதி பிரயசாந்த ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னெடுத்த தொடர் விசாரணைகளை அடுத்தே குறித்த 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more