நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வு 01.11.2017 அன்று பாடசாலையின் அதிபர் திரு.சே.பவிந்திரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது மேலும் இந்நிகழ்வில் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும்இலங்கைத் தமிழ் பழைய மாணவர் சங்கம் ( பிரான்ஸ் ) கிளையின் மூலம் 10 மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வும் இடம் பெற்றது .இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலயக் கல்வி பணிப்பாளர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .