image_446be3f686ஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் முதல் முறையாக இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளுக்கான விஜயத்தை இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள் இருவர் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் திந்தி மென்டிஸ், இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியைச் சேர்ந்த நிஷ்ந்தி லியணகே ஆகியோரே, இவ்வாறு ஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். ஒரு வருட காலத்தைக் கொண்ட இந்தச் சமாதான நடவடிக்கைகளில், இலங்கை இராணுவத்தின் சார்பாக கலந்துகொள்கின்ற முதல் இரு பெண் இராணுவ அதிகாரிகள் இவர்களாவர். அந்த வகையில், மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளில் (MINUSCA) கண்காணிப்பு அதிகாரிகளாக (MILOBS) கலந்துகொள்ளும் இவர்கள், இராணுவத் தளபதியின் ஆசியைப் பெறும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவை, இராணுவத் தலைமையகத்தில் வைத்து நேற்றுச் சந்தித்தனர்.

இதன்போது, இவ் அதிகாரிகளக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி, இவை ஓர் பொண்ணான வாய்ப்பாக உள்ளது எனவும் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சில பெண் அதிகாரிகளையும் சமாதான நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்க உள்ளதாகத் தெரிவித்தார். இச்சந்திப்பில் நடவடிக்கைகள் பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் அருண முகைந்திரம், இலங்கை இராணுவ மகளிர்ப் படையணித் தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் தில்ருக்ஸ் முனசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவமானது, ஐக்கிய நாடுகளின் சமாதான நடடிக்கைகளுக்கான பயணத்தை 1995ஆம் ஆண்டு, ஆபிரிக்காவின் கொங்கோ பிரதேசத்துக்குறிய விஜயத்தை மேற்கொண்டது. அதில் 16 அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழுவினர் காணப்பட்டனர் என்துடன், 1960ஆம் ஆண்டு, இச்சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1962ஆம் ஆண்டு நிறைவுற்றது.