dfgfgஅநுராதபுரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தற்காலிகமாக தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த அரசியல் கைதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

இதன்போதே அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது. அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்று மதியம் 12.30 மணியளவில் யாழ். பல்கலை மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அருட்தந்தை மா.சக்திவேல், அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.