z2 - Copyஎமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பற்குணராசா சிவதீபன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மானிப்பாய் சமுர்த்தி வங்கி பிரிவில் உள்ள 9 கிராமங்களைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின் தங்கிய 35 குடும்பங்களுக்கு சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து நுளம்பு வலைகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி விண்ணப்பம் மானிப்பாய் சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட 9 கிராமங்களில் அதிகமான நுளம்பு தாக்கம் இருப்பதுடன் கடந்த வருடம் அதிகமான டெங்கு தாக்கத்திற்குட்பட்ட கிராமங்களாக இருப்பதனால் இவ் வருடமும் மழை காலம் ஆரம்பித்துள்ளமையினால் நுளம்பு தாக்கத்திலிருந்து அவர்களை பாதுகாத்து கொள்ளநுளம்பு வலைகளை வாங்குவதற்கு பொருளதாரா ரீதியாக பின்தங்கிய மக்களாக இருப்பதன் காரணத்தினால் இவர்களுக்கான நுளம்பு வலைகளை தந்துதவுமாறு பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் கடிதம் மூலம் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவ் 35 குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் மனிதபிமான உதவியினை வழங்கி இவ் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நுளம்பு தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக நுளம்பு வலைகளை வழங்கியமையிட்டு குறித்த குடும்பங்கள் சார்பாக நன்றிகளை கூறிக்கொள்வதோடு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

z1 z2