3காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய தீர்வு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யோலன்டா போஸ்டர், கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று சந்தித்தார். இதன்போதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அவரிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.