lord nasbeyஇலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள புள்ளி விபரங்கள் சரியானவை அல்ல என, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். லோர்ட் நெஸ்பி என்பவரே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்படி, தருஸ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவர் கூறியுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டாலும், சுமார் 7,000 பேரே இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் லோர்ட் நெஸ்பி சுட்டிக்காட்டியுள்ளார்.