Header image alt text

UN human right commissionஅனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் 28ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய மீளாய்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதனை தொடர்ந்தும் மீண்டும் 17ஆம் திகதியும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட 30 வருட யுத்தத்தின் பின்னர் பல்வேறு பரிந்துரைகளை இதன்போது மனித உரிமைகள் பேரவை முன்வைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

bus accidentகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரன்குளி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்டு கட்டுப்பாட்டை இழந்து பாலமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்து சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நபர்களில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மேலும், 43பேர் காயமடைந்த நிலையில் புத்தளம் மற்றும் முந்தல் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகிறது. Read more

pakistan shipபாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான ´பிஎன்எஸ் சைப்´ கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்த இக் கப்பலை, கடற்படையினர் வரவேற்றனர்.

123 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக் கப்பல், 225 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. Read more

thomas chenanஐக்கிய அமெரிக்காவின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான பிரதி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஸ்செனன் இன்று இலங்கைக்க விஜயம் செய்யவுள்ளார்.

தனது பங்களாதேசுக்கான விஜயத்தை நிறைவு செய்து விட்டு இன்று பிற்பகல் அவர் நாட்டை வந்தடைவார் என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தனது விஜயத்தின் போது, தோமஸ் ஸ்செனன், இலங்கையின் உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், அரச சார்பற்ற அமைப்புக்களுடனும் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். Read more

zcxcxமாத்தளை லக்கல தெல்கமு ஒயாவில் நிராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளின் சடலங்கள் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளன. இதன்பாடி, நீராடச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த எட்டு பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 12 மற்றும் 7 வயதுடைய சிறுமிகளின் உடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள், நீழ்ரில் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

shalila munasingaலிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸலில முனசிங்க உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், ஷலில முணசிங்க உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று இவர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ංංவவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில வணக்கஸ்தலங்களில் பணம் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் நேற்று இரவு அடையாளந் தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த தங்கச்சங்கிலியும், பணமும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆலயத்தில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது. Read more