pakistan shipபாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான ´பிஎன்எஸ் சைப்´ கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்த இக் கப்பலை, கடற்படையினர் வரவேற்றனர்.

123 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக் கப்பல், 225 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர்வரும் 08ம் திகதி இலங்கையில் இருந்து இக் கப்பல் புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.