shalila munasingaலிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸலில முனசிங்க உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், ஷலில முணசிங்க உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று இவர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.