Header image alt text

manus island refugeesமனுஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த முகாம் கடந்த வாரம்முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர். அவர்களை பப்புவா நியுகினி மறறும் லோரெங்கோ ஆகிய முகாம்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், அது அகதிகளின் உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது. படகுகள் மூலம் அவுஸ்திரேலிய சென்ற அகதிகள் விசாரணைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். Read more

floodபலத்த மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வறட்சியை தொடர்ந்து, வட மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருவதால், யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Read more

ACCIDENTமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்துள்ளார்.

மின்சார சபையில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த இரண்டு பிள்ளை தந்தையான நடேசன் வயசு 37 என்பவரே குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவராவார். Read more

gfhfghgகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் நாளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். Read more

sfdfdfdfயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும் இல்லாது பயணிப்பதாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபோதையில் உந்துருளியை செலுத்தியைமை தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச பூசகர் ஒருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைபடுத்தப்பட்டார். Read more

armyஇராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 5 ஆயிரத்து 412 பேர் பொதுமன்னிப்பு காலத்துக்குள் மீளவும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர்களை சேவையிலிருந்து சட்டரீதியாக விலக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. Read more

sadfasdதரமற்ற எரிபொருளுடன் வந்த கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது. ஐ.ஓ.சி நிறுவனத்தால் இலங்கைக்கு தரமற்ற எரிபொருளைக் கொண்டுவந்த கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

டோர்ம் அஸ்ட்ரீட் என்ற குறித்த கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 15 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. எனினும், பெட்ரோலின் தரம் தொடர்பில் எழுந்த சிக்கல் காரணமாக 17ஆம் திகதி கப்பலைத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. Read more

thomas chenanமறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசத்துடன், நேற்று மாலை இலங்கை அமெரிக்க இரண்டாம் சுற்று ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார். அதன் பின்னரான கூட்டு அறிவிப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். Read more

iranaimaduகிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். Read more

schoolமுல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில், விசுவமடு, உடையார்கட்டு, துணுக்காய், மாந்தை போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் தொடர்ந்தும் இடை விலகி செல்கின்றமை அதிகரித்த வண்ணமுள்ளது. பின் தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களே இடைவிலகுகின்றமை தரவுகள் ஊடாக தெரியவந்துள்ளது. Read more