20171108_113053 - Copyஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் வவுனியா கோயில்குளத்தில் இன்று (08.11.2017) புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 2.00 மணிவரையில் நடைபெற்றது. இதில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல், அரசியலமைப்பு சம்பந்தமான விவகாரங்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அரசியலமைப்பு தொடர்பிலான இப்போதைய நிலைமைகளையும், இடைக்கால அறிக்கையையும் அதற்கு இருக்கின்ற எதிர்ப்புக்களையும் பற்றி விளக்கிக் கூறினார். அத்துடன் வரக்கூடிய அரசியலமைப்பு வரைபு தமிழ் மக்களுடைய அபிலாசைகளளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமென்று நம்பவில்லை, Read more