sdfdsfdsfdநாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் வாசிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரே இவ்வாறு துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.