ACCIDENTமுல்லைதீவு வற்றாப்பளை பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரம் ஒன்றுடன் மோதுண்டு 24 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வற்றாப்பளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதி வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெறுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.