indonesiaஇலங்கையைச் சேர்ந்த 19 பேர் இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளாக சென்ற அவர்கள், லிப்பா என்னும் கிராமத்தில் தங்கியிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக அந்நாட்டின் இணையத்தளம் கூறியுள்ளது.

சுற்றுலாப்பயணிகளாக சென்ற அவர்கள், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக கடந்த மூன்று தினங்களாக வீடுகளில் தங்கியிருந்துள்ளனர்.இதன்மூலம் இவர்கள் இந்தோனேசிய வீசா விதிகளை மீறி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாரணைகளுக்காக குறித்த 19 இலங்கையர்களினதும் கடவுச்சீட்டுக்கள் இந்தோனேசிய அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.