missingயாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீள விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் 12 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

12 மனுக்களில் 9 பேரின் மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில் அந்த 9 மனுக்களையும் நிராகரித்து ஏனைய மூன்று வழக்குகள் மீதான விசாரணையும் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார். Read more