உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. 2043ஃ57 என்ற வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் சம்பந்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி ஒன்றை தீர்மானிப்பதற்கு குறித்த 2043ஃ57 என்ற வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது கட்டாயமாகும்.இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.