dead-bodyதிருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர், நேற்றுமாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சிறிகாந் சுரேன் (18 வயது) எனும் இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார். வயல் உழுதுவிட்டு, உழவு இயந்திரத்தைக் கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்துக்குள் இறக்கியபோது, உழவு இயந்திரம் புரண்டதாகவும் அதில் இருந்த வீலுக்குள் சிக்குண்டமையால் இளைஞன் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.