train businessஇலங்கையில் ரயிலில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை தடை செய்வதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்.எம் அபேவிக்ரம விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் வியாபாரங்களினால் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதுடன் உணவுப் பொருட்கள் சுகாதாரமில்லாமலும் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குறித்த தடை உத்தரவிக்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் வர்த்தகர்களின் நாள் வருமானம் இல்லாமல் போவதை கருத்திற் கொண்டு பிரதான ரயில் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய ரயில் நிலையங்களில் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு தடையில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.