univ-of-jaffnaநாளைய தினம் வழமைபோல் யாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் விரிவுரைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய அனைத்து பீட மாணவர்களையும் விரிவுரைகளுக்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து போராட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.