paffrelபாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை பிரஜா உரிமையற்றவர்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் வேறு நாட்டில் பிரஜா உரிமை பெறவில்லை என குறிப்பிடப்பட்ட சத்தியக் கடதாசியொன்றை அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில் பெப்ரல் எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு, சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை ஊடாக சமூகத்தில் நிலவும் சந்தேகத்தை அகற்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்க முடியும் என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.