Header image alt text

budget 20182018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 191 வாக்குகள் ஆதரவாகவும் 58 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த ஏனையவர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியனவும் ஆதரவாக வாக்களித்தன. Read more

P1460997 - Copyயாழ்ப்பாணம் மானிப்பாய்சோதி வேம்படி வித்தியாசாலையின் பரிசளிப்பு விழா  14.11.2017 பிற்பகல் 2மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி சுனித்ரா சூரியராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. ச.சிவானந்தராஜா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றன. Read more

bomb-blast11-21கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாகப்பாம்பு ஒன்றை அடித்துக் கொன்ற ஒருவர், வீட்டுக்கு அருகாமையில் இருந்த குப்பை குவியலில் அதை எரிக்க முற்பட்டுள்ளார். இதன்போது, பாரிய சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். Read more

Ranil-Wickremesingheமுறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆணைக்குழு கேட்டுள்ளது.

சத்தியக்கடதாசி ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதற்குமுன் பிரதமர் விடயங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

dfweஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் கே.ஜி பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 10.15 மணியளவிலேயே இந்த தீ விபத்து சம்பவித்துள்ளது. நான்கு வீடுகளை கொண்ட குறித்த லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமாகியுள்ளதுடன் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. Read more

elephant attachதமது நிரந்தர வதிவிடத்தைத் தேடி யானைகள் சில மத்தள விமான நிலையத்துக்குள் புகுந்த சம்பவங்கள் கடந்த பல நாட்களாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானநிலையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு யானைகள் உள் நுழைந்ததாகவும், பின் இவற்றை துரத்தும் நடவடிக்கையில் ஹம்பாந்தோட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

UN human right commissionஇலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்களில் பொறுப்புக்கூற தவறி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினது உலக பருவகால மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் கடந்த 2015 ஒக்டோபரில் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தில், பல உறுதிமொழிகளை வழங்கியது. Read more

court_gavelஇலங்கையின் இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

dasanayakeதெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்­படையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறு நீதி­மன்றம் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­தது.

கோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த உத்­த­ரவை நேற்று பிறப்­பித்தார். Read more

election meetஉள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடங்­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் தேர்தல் தினம் குறித்து தீர்­மானம் எடுக்க இன்று சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு கூடு­கின்­றது.

இன்று வியா­ழக்­கி­ழமை கூட­வுள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தேர்தல் குறித்த திக­தியை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்க உள்­ளது. இதே­வேளை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திக­திக்­குள்­ளான திக­தியில் உள்­ளு­ராட்­சி­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. Read more