cabinet decisionகாணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தல் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, காலத்துக்கு ஏற்றாற்போல் மிகவும் சரலமான நிபந்தனைகளை உள்ளடக்கிய கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்துதல், கொடுப்பனவு அட்டையின் கீழ் வசிப்புக்காக வழங்கப்படுகின்ற காணிகளை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகளை செய்துகொடுத்தல், அடுத்த உரிமையைக் குறிப்பிடாது கொடுப்பனவு அட்டை உரித்தான நபர் ஒருவர் மரணிக்கும் போது அவருக்கு உரித்தான கொடுப்பனவு அட்டை சொத்தின் உரிமையை சாதாரண சிவில் சட்டத்தின் கீழ் கிடைக்கும் வகையிலான திருத்தங்களை உட்படுத்தியே, இந்தக் கட்டளைகள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்த யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.