bomb-blast11-21கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாகப்பாம்பு ஒன்றை அடித்துக் கொன்ற ஒருவர், வீட்டுக்கு அருகாமையில் இருந்த குப்பை குவியலில் அதை எரிக்க முற்பட்டுள்ளார். இதன்போது, பாரிய சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையாவார். சம்பவம் பற்றி ஆய்வு நடத்திய பொலிஸார், யுத்த காலத்தின்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி அல்லது வெடிக்கும் நிலையில் இருந்த வெடி மருந்து, தீ மூட்டியதால் வெடித்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.