trainதொடரூந்து தடம்புரள்வு காரணமாக வடக்கு தொடரூந்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி இடம்பெறும் தொடரூந்து சேவைகள் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும்ரூnடிளி;தொடரூந்து சேவைகள் மதவாச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறையிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த நகர்சேர் தொடரூந்து, மதவாச்சிக்கும் – பரசங்கஸ்வௌவிற்கும் இடையிலான பகுதியில் நேற்று முன்தினம் தடம்புரண்டது.